Siirry suoraan sisältöön
Viduthalaikilarchi
Tallenna

Viduthalaikilarchi

Kirjailija:
pokkari, 2026
tamili

பத்திரிகைச் செய்தியொன்று, கான்வார் மாவட்டக் கிராமக் காட்டில் நடைபெற்றதாக வெளியா யிற்று அண்மையில்.

துள்ளியோடிய கன்றுக்குட்டி யொன்றை புதரில் பதுங்கியிருந்த வேங்கை துரத்தியதாம்.

அதைத் தாய்ப் பசு கண்டு விட்டதாம். வேங்கையை எதிர்த்துத் துரத்தியதாம். தன் கொம்புகளால் வேங்கையின் பாய்ச்சலைத் தடுக்க முனைந்ததாம்.

"வேங்கையைத் துரத்திய பசு" வேடிக்கையல்ல உண்மை நிகழ்ச்சி.

வேங்கையைத் துரத்திடும் பசுக்கள் பலவற்றை உலகமெங்கும் காணமுடிகிறது, இப்போது

பலஹீனனும் சில நேரங்களில் பழிதீர்த்துக் கொள்கிறான். கோழையும் வீரனாகிறன்.

அழுது அழுது, கண்ணீர் காய்ந்து விடுகிறது. கதறிக் கதறி தொண்டையும் அடைத்து விடுகிறது.

பிறகுதான் கதியற்றவன் தன் கைபலத்தை நம்புகிறன். அதன் விளைவுதான் வேங்கையைப் பசு எதிர்க்கும் விசித்திரம்

நைந்துபோய் நரம்பும் தோலுமான நாடுகள், தங்கள் நகங்களால் வெறி தீரும் மட்டும் ஆணவக் காரர்களை கிழித்து எரிந்திருக்கின்றன.

வேங்கை வீழ்ந்திருக்கிறது; பசு வென்றிருக்கிறது;

கன்று காப்பாற்றப்பட்டிருக்கிறது.

Kirjailija
M Karunanidhi
ISBN
9788199677081
Kieli
tamili
Paino
86 grammaa
Julkaisupäivä
1.1.2026
Sivumäärä
54