Siirry suoraan sisältöön
Poonthottamum Inamuzhakkamum
Tallenna

Poonthottamum Inamuzhakkamum

Kirjailija:
pokkari, 2025
tamili

எனது அன்பு உடன்பிறப்பே, இளைய தம்பி நான் உன் வயதில் இருந்தபோது 1947 முரசொலி வார இதழில் எழுதிய இரண்டு கட்டுரைகள் 1951ல் சென்னை பொறியியல் கல்லூரியில் 'பூந்தோட்டம்'என்ற தலைப்பில் ஆற்றிய உரை -ஏற்கனவே நூல் வடிவில் வந்தவைகள் தான் எனினும்; இப்போதும் உனக்குப் பயன்படுமென்று தமிழ்க் கனிப் பதிப்பக வாயிலாகப் பாரதி நிலையத்தார் வெளியிடுகிறார்கள். நிலையத்தார்க்கு என் நன்றி.

சொர்க்க லோகம், சூரியன் மறையும் நேரம். சுந்தரமான பூஞ்சோலை. சோலையின் ஒரு மூலையில் சொந்த விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த சில தேவர்கள், சுற்றிச் சுற்றிப் பூப்பறித்து சுழல் வண்டுகளென ஆடிவந்த அரம்பையர்கள், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் ஒய்யாரம்; ரம்பையின் நவரத்ன மாலையைப் பார்த்து மேனகை, இது ஏதடி? என்று கேட்க இது இந்திரன் தந்தது என...... 'ஓஹோ கட்டிலறைப் பரிசா'என்று மற்றவர்கள் கேலி செய்ய...... அப்படியே ஒவ்வொருவரும் தங்கள் அணிகளை...... இது சந்திரன் சன்மானம், இது சூரியன் பரிசு, இது மன்மதனின் வெகுமானம் என அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர், சந்திரனும் தாரையும் அஸ்வதி நட்சத்திரத்தை எடுத்து பூப்பந்து ஆடிக் கொண் டிருந்தார்கள், ஒரு பகுதியில் பூலோகத்தையே உருட்டி அக்னி பகவான் வாயு முதலியவர்கள் கால்பந்து விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். பார்வதிதேவி பரமசிவன் தோளிலேகிடந்த பாம்பை யெடுத்து (ஸ்கிப்பிங் ரோப் ) குதிக்கயிறு ஆடிக் கொண்டிருந்தாள். பிரம்மாவும் சரஸ்வதி யும் புதிதாக வெளியான ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யத்தில் இருந்தனர். மகாவிஷ்ணு, லட்சுமி யோடு கண்ணா மூச்சி யாடுவதாகப் பொய் சொல்லி அவள் கண்ணைக் கட்டி அலைய விட்டுவிட்டு.......

Kirjailija
M Karunanidhi
ISBN
9788199612976
Kieli
tamili
Paino
68 grammaa
Julkaisupäivä
1.12.2025
Sivumäärä
40