Siirry suoraan sisältöön
Aarumatha Kadunkaaval
Tallenna

Aarumatha Kadunkaaval

Kirjailija:
pokkari, 2026
tamili

கல்லக்குடியில் போர்க்களம் அமைப்பதற்கான சூழ்நிலைகள் உருவானதிலிருந்து, சிறைவாசம் முடிய - நினைவில் நின்ற நிகழ்ச்சிகள் குறிக்கப்பட்டு திராவிட இயக்கத்தின் வருங்கால சரித்திரத்திற்கு இதுவும் பயன்படலாம் என்ற ஆசையுடன் வெளியிடப்படுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சிமிக்க எளிலேடு. அதிலே கல்லக்குடி ஒரு உணர்ச்சி அத்தியாயம். போர்ப்பரணி. புதிய புறநானூற்றில் உயிரோட்டமுள்ள ஒப்பற்ற வரிகள், அந்த உணர்வு தவழ் வரிகளை செந்நிறத்தால் தீட்டிக் காட்டிய தீரர்கள் இந்த மண்ணின் மறையாத மணி விளக்குகள்.

போர்க்காவியம் தீட்டும் புலவர்க்கு அவர்கள் கதாநாயகர்கள், கவிதைத் தேரின் தோரண வாயிலாக அவர்களை அமைத்துக் களிப்படைவர்; வருங்கால கவிஞர் பெருமக்கள். விடுதலை கீதத்தின் கம்பீரமான தொனியிலே அவர்களின் திருநாமம் பொதிந்து கிடக்கும். நல்லவரும், நாட்டுக்குழைப்போரும் - தொடர்ந்து செல்லவேண்டும் - தொழுது வணங்க வேண்டிய வீரக் கழல்களை ரத்தச் சகதியிலே பதித்து விட்டுப் போன உத்தமர்கள், வீரர்கள், தியாகச் செம்மல்கள், மடிமேல் வைத்து வளர்த்த திராவிட மாதாவுக்கு தாங்கள் செய்யவேண்டிய கடமையை பூரணமாகச் செய்தவர்கள். புகழ் முத்துக்கள். அவர்கள் வாழ்க என வாழ்த்துவோம். உதிரம் வடித்தோருக்கும், உயிர் தந்தோருக்கும், கரம் ஈந்தோருக்கும், கால் வழங்கியோருக்கும் நமது கண்ணீரையும், பெருமூச்சோடு கலந்த இந்த வாழ்த்தையும் தவிர, வேறென்ன நம்மால் பதிலுக்குத் தந்திட முடியும்

அந்தக் கண்ணீர் அலைகளினூடே, இந்த எழுத்துக் குவியலை மிதக்க விடுகிறேன், தீரர்கட்த வீர வணக்கம் செலுத்தியபடியே

Kirjailija
M Karunanidhi
ISBN
9788199612969
Kieli
tamili
Paino
336 grammaa
Julkaisupäivä
1.1.2026
Sivumäärä
248