
Thiyaga Varalaru
தியாக வரலாறு - கலைஞர் மு. கருணாநிதி
தாய்மொழியாம் தமிழ் மீது நமக்கிருக்கும் பற்றும் பாசமும் தாய்ப்பால் அருந்தும்போதே உடன் ஊட்டப் பட்டவை ஆகும். அதேபோல் தமிழ் மொழியைப் பாதிக்கும் இந்திமொழித் திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர் களால் துவக்கப்பட்ட போராட்டம் அறிஞர் அண்ணா அவர் களால் தொடரப்பட்டு தலைவர் கலைஞர் அவர்களால் வழி நடத்தப்பட்டு வருகிறது.
1938இல் சென்னை மாகாணத்து அரசாங்க ஆணை யொன்றை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்த மொழிப் போராட்டம், இன்று இந்தியாவின் அரசியல் சட்டத்தையே அறைகூவலுக்கு உள்ளாக்கும் களமாக விரிவடைந்து விட்டது.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்தில் இடையறாது - தொடர்ந்து நடைபெற்று வரும் மொழிப் போராட்டத்தைப் போல், உலகத்தில் நீண்டகாலமாக நடை பெறும் அறவழிப்போராட்டம் வேறு ஏதுமில்லை. துளியும் வன்முறையின்றி தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் தியாகப்படை வரிசையால் வழி நடத்தப்படும் மொழிப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் தியாகத் தலைவர் கலைஞர் அவர்கள் 1984 சனவரி 25அன்று சென்னையில் நடைபெற்ற தியாகிகள் நினைவுநாள் கூட்டத்தில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கபேருரையை இச்சிறுநூல் வடிவில் தி.மு.க இளைஞர் அணியின் சார்பில் வெளியிடுகிறோம்
- Författare
- M Karunanidhi
- ISBN
- 9788199657519
- Språk
- Tamil
- Vikt
- 54 gram
- Utgivningsdatum
- 2025-12-01
- Förlag
- Nilan Publishers
- Sidor
- 30
