
Ponnaram
நாட்டின் நரம்புகள்-இன்று ஏட்டிலே கண் செலுத்துபவர்கள் என்ற உண்மையை நல்லறிவாளர்கள் நவிலக் கேட்டோம். நாடு சுற்றியோர்- ஏடு படித்தோர் - பாடுபட்டோர் - இத்தனை பேரும் கேடு களைய தேர்ந்தெடுத்தப் படை, மாணவப் படை, மாணவப் படையின் மாண்புகள் குறித்து-பல்வேறு நாட்டின் சரித் திரங்கள்......படிப்போரையும் துடித்திடச் செய்யும் வகையில் தீட்டப்பட்டுள்ளன.
மாணவப் பருவமிருக்கிறதே-மாணவ நிலையல்ல- பருவத்தைக் குறிப்பிடுகிறேன் - முறுக்கேறிய பருவம் - குறிப்பிடுகிறேன்-முறுக்கேறிய முட்டவரும் காளையையும் மோதிக் கொல்லுகின்ற பருவம்- துணிவுமிக்க பருவம்-தொண்டு புரியும் உள்ளங் கொண்ட தூய்மைப் பருவம் இலட்சியப் பாதையிலே இடர் கண்டு சிரித்து - துன்பம் தொடர் கதையானால் அதையும் ரசித்து - எடுத்த காரியத்தை எப்படியும் நிறைவேற்ற ஆர்வ அலைகளால் மோதுண்டு வேங்கைப் புலியென சீறிச் செயலாற்றும் பருவம்
இத்தகைய ஈடு இணையற்ற இளமைப் பருவம்-இலட்சியத்துக்காக மட்டுமே தியாகம் செய்யப்பட்ட நாடுகள் பலப்பல. இன்ப விளையாட்டு-ரசமான கேளிக்கை-ரதிதேவிகளின் மந்தகாசமடி - இப்படி வாலிபத்தை வாரிச் செலவிடு
கின்றவர்களும் உண்டு.
இவர்களுக்கு நடுவேதான் நாட்டுக்காக வாழ்வை ஈந்துவிட்ட நல்லவர்களும் நடமாடுகிறார்கள். வீடு துறந்து - நாடு சென்று கமண்டலமேந்திகளாகத் திரியவேண்டுமென்பதல்ல;
- Författare
- M Karunanidhi
- ISBN
- 9788199677029
- Språk
- Tamil
- Vikt
- 109 gram
- Utgivningsdatum
- 2026-01-10
- Förlag
- Nilan Publishers
- Sidor
- 72
